×

விபத்தில் வேன் டிரைவர் பலி

 

அவனியாபுரம், ஜூன் 12: மதுரை, ஆண்டார் கொட்டாரம் பகுதியை சேர்ந்தவர் முத்து. இவரது மகன் அசோக்(27). வன் டிரைவரான இவர், நண்பர் சேட் என்பவருடன் நேற்று முன்தினம் அருப்புக்கோட்டையில் நடந்த விசேஷத்திற்கு சென்றுவிட்டு, டூவீலரில் மதுரை திரும்பினார். அருப்புக்கோட்டை ரிங்ரோடு, மண்டேலா நகர் அருகே அவர்களின் டூவீலர் நிலை தடுமாறி, ரோட்டின் மையப்பகுதியில் இருந்த கல்தூணில் மோதியது.

இந்த விபத்தில், படுகாயமடைந்த அசோக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த, சேட் காயமின்றி தப்பினார். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் மதுரை நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அசோக்கின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக எஸ்.ஐ ஞானபிரபாகரன் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

The post விபத்தில் வேன் டிரைவர் பலி appeared first on Dinakaran.

Tags : Avaniyapuram ,Muthu ,Andar Kottaram, Madurai ,Ashok ,Dinakaran ,
× RELATED லக்கேஜ்களை மதுரையிலேயே விட்டு விட்டு...